சித்தாந்தக்
கண்ணாடிகள்
========================
இடது வலதாய்ப்
பிரிந்து
நிற்கிறோம்.
அனைவரின்
கண்களிலும்
அவரவர் கண்ணாடி..
எங்களின்
நியாயங்களும்
தர்மங்களும்
உங்களின்
கண்ணாடிகளிலும்
உங்களுடையன
எங்கள்
கண்ணாடிகளின்
ஊடாகவும்
அநியாயங்களாகவும்
அதர்மங்களாவுமே
காட்சி
தருகின்றன.
எப்போதுதான்
இரண்டு தரப்புமே
கண்ணாடிகளைக்
கழற்றி
எறிந்துவிட்டு
கண்களால்
மதிப்பீடு
செய்யப்போகிறோம்..?
No comments:
Post a Comment