Tuesday 24 January 2017

ஆசீர்வதிப்பாய் குருவே..!

ஆசீர்வதிப்பாய் குருவே..!
     ***************

குருவே ! கருணையின் உருவே !
உன் அருளாசியோடு இன்று,
ஒரு புது முயற்சியில் நான்..!

ஆசீர்வதிப்பாய்
, இந் நன்னாளில்..!
புது முயற்சி தொடங்கும் 
இப் பொன்னாளில்..!


தேடிச் சோறு நிதம் தின்று மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
 
வாடப் பலசெயல்கள் செய்து வெறும்
 
வேடிக்கை வாழ்வில் உழன்ற
 என்னை,

அன்போடு அரவணைத்து,
உயிர் மூலம் உணர வைத்து,
அன்பு, அமைதி, ஆனந்தம்
 
என்றும் பரிமாறி,
 
என்னுள் மலர வைத்தாய்.!
பொய்மையிலிருந்து மெய்மைக்கும்,
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்,
நிலையாமையிலிருந்து நிலைபேற்றிற்கும்
 
வழி நடத்தினாய்..!
வெறும் படைப்பாய் வாழ்ந்த 
எம்மைப்
படைத்தவனாய் உணர ,
பலவாறாய் பயிற்சிகள் கொடுத்தாய்..!
தளராது முயற்சிகள் எடுத்தாய்..!

சாமுண்டியின் மடியில்
ஜக்கியாய் இருந்து சத்குருவாய்
அவதரித்த நீ,

என்றும் எமக்குப் புரியாத
ஞானத்தின் பிரமாண்டம்.
புரிந்ததெல்லாம்- உன்
அருகாமை தரும்
அன்பு,அமைதி, ஆனந்தம்..

உண்மையில்
, உணர்கிறேன்
முதன் முதலாய்,
 
உன்னைப் பார்த்த நாள்தான்
நான் இங்கு புதிதாய்ப் பிறந்த நாள்..!
பிறவிப் பெருங்கடலுள்
மாலுமியில்லாதோர்
ஓட்டை ஓடத்துள் தத்தளித்துக்
கொண்டிருந்தோம்..

உன்னைப் பார்த்த பின்புதான்
நம்பிக்கை பிறந்தது..
இனியோர் ஜென்மம் எமக்கினி
இல்லை என்று...

பெறுவதற்கே தகுதியில்லைதான்..

ஆனாலும் கேட்கிறேன்,
ஆசை மிகுதியில்நான் ...!.

குருவே ! கருணையின் உருவே !
எந்த ஒரு வலியும் தாங்கி
என்றும் உன் வழியில் தொடர,
‘வேண்டும்’ என்று உன்னிடம்
வேண்டுவதெல்லாம் ஒன்றுதான்..!
அது உன் அருளாசி மற்றும் அன்புதான்..!


       ********************************

No comments:

Post a Comment