Wednesday 1 February 2017

ஆ.மகராஜன்: நின்று போன தூறல்

ஆ.மகராஜன்: நின்று போன தூறல்: நின்று போன தூறல்         ******* வறண்டு வெடித்த வயல்வெளியில் நின்றவனை வானிலிருந்து கடவுளின் விரல்களாய் நீண்டு தீண்டின தூறல்...

நின்று போன தூறல்


நின்று போன தூறல்
        *******



வறண்டு வெடித்த
வயல்வெளியில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
விரல்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடல் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போயிற்று
கணப் பொழுதில்.

மழையாய்ப் பரிணமிக்க 
மறுதலித்து அவன்பால்
கருணையும் கவலையும் 
கொள்ளாத் தூறல் 
நின்று போனதில்,
வானம் பார்த்து நின்றவனின்
விழிவழி  வழிந்த 
கண்ணீர் நில்லாது போயிற்று..!


     -ஆ.மகராஜன், திருச்சி.


      *******